الجمعة، 26 نوفمبر 2010

வேதியல் துறை

நவீன ரசாயனத்தின் தந்தை (Father pf Modern Chemistry) என அழைக்கப்படும் ஜாபிர் பின் ஹையான் என்பவர் தான் முதன் முதலில் ரசாயனத்தில் செயல்முறை ஆய்வினை மேற்கொண்டார். இவர் வாழ்ந்த காலம் கி பி 8 ம் நூற்றாண்டாகும். இவரது பெயரைக் கூட மேற்க்கதியர்கள் அல்கெபர்(Geber ) என்று திரித்து விட்டனர். இவரது முக்கியக் கண்டுப்பிடிப்புகளில் ஒன்று கந்தக அமிலம் ஆகும். இன்றைய நவீன உலகில் ஒரு நாட்டின் தொழில் முன்னேற்ற அளவை தீர்மானித்திட அந்நாடு பயன்படுத்தும் கந்தக அமிலத்தின் அளவே அடிப்படையாக கொள்ளப்படுகிறது. இதிலிருந்து பார்க்கும் போது இந்த அமிலம் கண்டுப்பிடிக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை உணர்ந்துக் கொள்ளலாம்.
 
ரசாயனம் பற்றி இவர் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நூறாகும். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் இன்றளவும் அரபி மொழியில் பாதுக்காக்கபட்டுள்ளமை இவரது புகழுக்கு பெருமை சேர்பதாக அமைந்துள்ளது.
 
இவருக்கு பின் அல்ராஷி, சுன்னான், அல் ஹாஜிஸ், இப்னு வாசியா, மஸ்லமா இப்னு அஹ்மத், அபு மன்சூர், அல் பிருணி, இஸ்சுதீன் அலி இப்னு அல்ஜில்தகி  போன்ற வேதியல் அறிஞர்கள் தோன்றி வேதியல் துறைக்கு வியக்கதக்கப் பணிகள் பல புரிந்துள்ளனர்.
 
பல்வேறு தொழில்கள் சம்பந்தமான பெரும்பாலான கலைகள் தோன்றுவதற்கு இந்த முஸ்லிம் அறிஞர்கள் தங்களது ரசாயன அறிவை செயல்ப்படுத்தி உள்ளனர். இவர்களின் செயல்முறை ரசாயன அறிவை (Knowledge of Applied  Chemistry ) புரிந்துக் கொள்ள இங்கே காகித கலையே சான்றாகும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق