ஈராக் நாட்டை சேர்ந்த குதாமா இப்னு ஜாபர் அல்காத்திப் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளர். கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய, குதாமா பாக்தாதில் அரசின் கணக்கராகப் பணியாற்றினார்.
இவர் கி பி 928 இல் கிதாபுல் கராஜ் என்ற பெயரில் நிலவரி பற்றிக் கூறும் நூல் ஒன்றினை எழுதினார். இந்நூலின் பதினோராம் அத்தியாயத்தினை அப்பாஸிய ராஜ்யத்தின் தபால் நிலையங்களையும் பாதைகளையும் பற்றி குறிப்பிட்டு உள்ளார்.
இந்நூலின் பிரதான நோக்கம் இஸ்லாமிய ராஜ்யத்தைப் பற்றியும் குறிப்பாக பைசாந்திய ராஜ்யதோடு ஒட்டிய எல்லைகளைப் பற்றியும் விளக்கி கூறப்பட்டுள்ளது. இவரது நூல் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாக இருந்தும், எல்லைப் பாதுக்காப்பு போன்ற மிக முக்கியமான விசயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டு எழுதப்பட்ட ஒன்றாகும். அப்பாஸிய ராஜ்யத்தை சூழவுள்ள ராஜ்யங்களையும் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதார, கலாசார, பண்பாடு போன்ற வர்ணனைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்து உள்ளது.
இவர் கி பி 928 இல் கிதாபுல் கராஜ் என்ற பெயரில் நிலவரி பற்றிக் கூறும் நூல் ஒன்றினை எழுதினார். இந்நூலின் பதினோராம் அத்தியாயத்தினை அப்பாஸிய ராஜ்யத்தின் தபால் நிலையங்களையும் பாதைகளையும் பற்றி குறிப்பிட்டு உள்ளார்.
இந்நூலின் பிரதான நோக்கம் இஸ்லாமிய ராஜ்யத்தைப் பற்றியும் குறிப்பாக பைசாந்திய ராஜ்யதோடு ஒட்டிய எல்லைகளைப் பற்றியும் விளக்கி கூறப்பட்டுள்ளது. இவரது நூல் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாக இருந்தும், எல்லைப் பாதுக்காப்பு போன்ற மிக முக்கியமான விசயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டு எழுதப்பட்ட ஒன்றாகும். அப்பாஸிய ராஜ்யத்தை சூழவுள்ள ராஜ்யங்களையும் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதார, கலாசார, பண்பாடு போன்ற வர்ணனைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்து உள்ளது.