الثلاثاء، 20 سبتمبر 2011

புவியியல் துறை - அல் இஷ்தக்ரி

கி.பி.பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தவரான இவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றி ஒன்றும் தெரிய வில்லை. இவர் அதிக அளவு பயணம் செய்து தனது அனுபவங்களை பின்பற்றி அல்-மஸாலிக் வல் மமாலிக் என்னும் நூலை எழுதி உள்ளார். இந்நூல் முக்கியமாக அல் பல்கியால் எழுதப்பட்ட ஸ்வருல் அகாலிம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
இந்த நூலில் வரை படங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாடும் தனிதனி வர்ணம் தீட்டிக் காட்டப்பட்டு உள்ளது. இவரது படங்களில்
மத்திய தரைக்கடல் வட்டமாக அல்லது நீள்வளைய வடிவில் காணப்படுகிறது. இப்படங்கள் பல்கியால் வரையப்பட்ட படங்களை ஒத்து இருக்கின்றன.
பல்கி குழுவைச் சேர்ந்த ஏனைய புவியியல் வல்லுனர்களுக்கு இவரது நூல் நம்பகமான தகவலை தரக்கூடிய ஆக்கமாகத் திகழ்ந்து இருக்கிறது. இந்த நூல் பாரசீக மொழியில் மொழி பெயர்க்கபட்டதோடு- பாரசீக மொழியில் புவியியல் நூல்கள் பலவற்றிற்கும் அடிப்படையாகவும் அமைந்து இருப்பதாகவும் புவியியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

http://en.wikipedia.org/wiki/Estakhri

ليست هناك تعليقات:

إرسال تعليق